'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை அரசின் பணி தொடரும் - அமைச்சர் வேலுமணி

'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி கிராம மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை தமிழக அரசின் பணி தொடரும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
x
'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி கிராம மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை தமிழக அரசின் பணி தொடரும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார். வேதாரண்யம் அருகே தண்ணீரால் சூழப்பட்ட வண்டல், குண்டூரான்வெளி, பழையாற்றங்கரை உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்கு அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அன்பழகன் ஆகியோர் படகு மூலம்  சென்று பார்வையிட்டனர். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, கஜா புயலை வைத்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் நினைத்த சதி மக்களிடம் எடுபடவில்லை எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்