கஜா புயல்: "ராணுவ உதவி கோரினால் வழங்கத் தயார்" - நிர்மலா சீதாராமன்

கஜா புயல்: "ராணுவ உதவி கோரினால் வழங்கத் தயார்" - நிர்மலா சீதாராமன்,மத்திய அமைச்சர்
x
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள், தேவைகள் குறித்த கோரிக்கை மனுவை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கஜா புயலுக்கு பின்னான மீட்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு கோரினால் ராணுவ உதவி வழங்குவது குறித்து பரிசீலிப்போம்" என்றார்.

Next Story

மேலும் செய்திகள்