கஜா புயல் : நாகையில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
கஜா புயல் : நாகையில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
x
கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10  லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். விழுந்தமாவடி என்ற இடத்தில் மீனவர்களை சந்தித்து, ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அந்த பகுதியில் சேதம் அடைந்த மாந்தோப்பு உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டார். வேட்டைக்காரணிருப்பு என்ற இடத்தில் நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். இந்த முகாமில் உள்ள மக்கள் சாப்பிட தயாராக இருந்த உணவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ருசித்து பார்த்தார்.  

Next Story

மேலும் செய்திகள்