பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை : தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது.
பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை : தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
x
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அக்கட்சி,இப்பிரச்சனை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்