மனக்கசப்புடன், மாற்றுப்பாதையை தேடியவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மனக்கசப்புடன், மாற்றுப்பாதையை தேடியவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மனக்கசப்புடன், மாற்றுப்பாதையை தேடியவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீரடித்து நீர் விலகுவதில்லை என்ற பழமொழியை சுட்டிக்காட்டியுள்ளனர்.  சிறு மனமாச்சரியங்களையும், வேறுபாடுகளையும் புறந்தள்ளி ஒன்றுப்பட்டு இயங்கினால், தேர்தல் களத்தில் அரசியல் எதிரிகளை, வீழ்த்தும் பெரும்படையாக அதிமுக மாறும் என்று குறிப்பிட்டுள்ளனர். 
மனக்கசப்பு காரணமாக மாற்று பாதையில் பயணிக்க சென்ற, தொண்டர்கள், உயர்நீதிமன்றம் அளித்திருக்கும்  தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதிமுகவில் இணைய வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்