ஆளுநர் கிரண்பேடியின் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின், சமூக பொறுப்புணர்வு நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளுநர் கிரண்பேடியின் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
x
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின், சமூக பொறுப்புணர்வு நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் இருவரும் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்த திட்டத்திற்குரிய கமிட்டிக்கு தெரியாமல் ஆளுநர் செயல்பட வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும், ஆளுநர் மாளிகைக்கு எதிராக நிறைய பேர் தலைமை செயலாளருக்கும், சிபிஐக்கும் புகார் அனுப்பி வருவதாகவும்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்