மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை

தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை
x
தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியிருக்கும் ரஜினி, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்தார். சென்னை, ராகவேந்திரா மண்டபத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்தும், அவர்கள் மீதான விசாரணை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்குவதற்கான எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும்,  மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோ சவாரி செய்த ரஜினியின் பேரன்கள்: 
 
இதனிடையே, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ரஜினிகாந்தின் மருமகன் தனுஷின் குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் காரில் வந்தனர். ராகவேந்திரா மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு, அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்