தனியார் மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி...

எம்.எல்.ஏ கருணாசை கைது செய்ய நெல்லை போலீஸ், சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி...
x
* இன்று அதிகாலை திடீரென கருணாசின் வீட்டிற்குள் 50க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து கருணாசை தேடியுள்ளனர். கருணாசின் குழந்தைகள், மனைவியிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டின் அனைத்து அறைகளிலும் புகுந்து கருணாசை தேடியுள்ளனர். இதனால் கருணாசின் வீட்டில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அனைவரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

* கடந்த ஆண்டு நெல்கட்டும்சேவல் கிராமத்தில் நடந்த பூலித்தேவல் பிறந்த நாள் விழாவில் கருணாஸ் தரப்புக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் கைது செய்யவே நெல்லை போலீசார் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சென்னைக்கு வந்துள்ளனர். கருணாஸ் வீட்டில் இல்லாததால், நிபந்தனை ஜாமின் கையெழுத்திட அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வருவார் என நெல்லை போலீசார் காத்திருந்தனர். ஆனால் அங்கு கருணாஸ் வராததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். 

* இதனிடையே, கருணாஸ் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்