செந்தில் பாலாஜிக்கு 2நாளில் பதில் சொல்வேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர், உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் பதில் சொல்வேன் என கூறினார்.
செந்தில் பாலாஜிக்கு 2நாளில் பதில் சொல்வேன் - அமைச்சர்  விஜயபாஸ்கர்
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் பதில் சொல்வேன் என கூறினார். தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டுமே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்