எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் மீது ஸ்டாலின் விமர்சனம்
மத்திய மாநில அரசுகள், பொய்யர்களின் கூடாரம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய மத்திய அரசு 2 ஆயிரம் கோடி
ரூபாய் ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு,
கட்டுமானப் பணிகள்தான் தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அமைச்சர்கள் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
Next Story