"வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு" - பிரதமர் மோடி மீது, ராகுல்காந்தி கடும் தாக்கு

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு - பிரதமர் மோடி மீது, ராகுல்காந்தி கடும் தாக்கு
x
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். பிரதமரின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புக்களை கொன்று வருகிறது என தமது டுவிட்டர் வலைப்பதிவில், அவர் பதிவிட்டுள்ளார்.  இந்தியாவின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி, ஹஃபிங்டன் போஸ்ட் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையை ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.  

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய்  கொள்ளையடிக்கப்பட்டு, திறமையில்லாதவர்களிடம் போர் விமானம் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதே சமயம் திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருவதாக ராகுல்காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்