தி.மு.க.வுடன் தினகரன் கூட்டு - அமைச்சர் தங்கமணி
தினகரன் திமுகவுடன் கூட்டு வைத்ததால் தான் அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியதாக அமைச்சர் தங்கமணி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிவிட்டு முதலமைச்சர் ஆக வேண்டும் என தினகரன் தனது குடும்பத்தாருடன் ரகசிய திட்டம் போட்டதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இந்த ரகசிய திட்டம் குறித்த ஆதாரங்கள் கிடைத்ததால்தான் ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் பேசிய அவர், திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை, சொத்து வழக்கில் ஜெயலலிதாவை சிக்க வைத்தார் என தினகரன் மீது அடுக்கடுக்காக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
Next Story