தேர்தலில் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி - மாயாவதி

கூட்டணியில் மரியாதை இல்லாவிட்டால் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி - மாயாவதி
x
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, இன்று லக்னோவில் புதிய வீட்டில் குடிபுகுந்துள்ளார்.இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளதாகவும் மரியாதையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஒருவேளை மரியாதையான தொகுதிகள் வழங்காவிட்டால் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாகவும் மாயாவதி அறிவித்தார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மாயாவதி இதுபோன்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க. அரசுகள் பிரித்தாளும் தந்திரத்தை கையாளுவதாகவும் குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்