காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : இளங்கோவன் திருநாவுக்கரசர் தரப்பினரிடையே மோதல்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தரப்பினருக்கும், திருநாவுக்கரசர் தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்த‌து.
காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : இளங்கோவன் திருநாவுக்கரசர் தரப்பினரிடையே மோதல்
x
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மேலிட பார்வையாளரான சஞ்சய் த‌த், தமிழக காங்கிரஸ் கட்சியின் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்றைய கூட்டத்தில், பல்வேறு அணி சார்ந்த தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பினரை வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாத‌ம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், வாக்குவாத‌ம் கைகலப்பாக மாறியதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான செல்வம் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த‌தால், கூட்டத்தில், பதற்றமான சூழல் நிலவியது.  


Next Story

மேலும் செய்திகள்