தெற்கில் உதித்தெழுந்த சூரியன் : கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

சென்னையில் இன்று நடைபெற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள்
தெற்கில் உதித்தெழுந்த சூரியன் : கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு
x
திமுக பொருளாளர் துரைமுருகன் :

* இந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி
* கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது


மத்திய அமைச்சர் நிதின் கட்கரி:

* நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது 
* எமர்ஜென்சி காலத்தில் திமுகவின் பங்கு அளப்பரியது


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி :

* மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் எப்போதும் முன் வைப்பவர் கருணாநிதி


தேவகவுடா: 

*20 வருட காலம் மத்தியில் நிலையான ஆட்சிகள் அமைய கருணாநிதி காரணம்


பீகார் முதல்வர் நிதிஷ்குமார்: 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டுவரப்படும் என்ற கருணாநிதியின் கொள்கைகளை ஸ்டாலினும் எடுத்து செல்ல வேண்டும்


குலாம் நபி ஆசாத்: 

* நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர் கருணாநிதி


டெரிக் ஓ பிரையன்

* மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடியவர் கருணாநிதி 

* கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிக்கு முன்னுரிமை அளித்தவர் கருணாநிதி 

சீதாராம் யெச்சூரி
* அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் கருணாநிதி



Next Story

மேலும் செய்திகள்