கருணாநிதி மறைவு : மக்களவையில் இரங்கல்

கருணாநிதி மறைவுக்கு, நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
கருணாநிதி மறைவு : மக்களவையில் இரங்கல்
x
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவை கூடியதும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். நாடு, ஒரு மிகச்சிறந்த ஆளுமை திறன் கொண்ட  தலைவரை இழந்து விட்டதாக இரங்கல் குறிப்பில் இடம் பெற்றிருந்தது. அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், மக்களவை , நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கருணாநிதி மறைவு : மாநிலங்களவையிலும் இரங்கல்



நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் கருணாநிதி மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கய்யா நாயுடு, இந்த இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். 




Next Story

மேலும் செய்திகள்