காஷ்மீர் சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை பாதுகாப்போம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர் சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை
x
ஜம்மு- காஷ்மீரில் யாருக்கு குடியுரிமை வழங்குவது என அம்மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை நீதிமன்றத்தின் மூலமாக பறிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை பாதுகாப்போம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்