"தலைவா வா" என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை - ஸ்டாலின்

கழக உடன்பிறப்புகள் யாரும் தங்களின் இன்னுரிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள்
தலைவா வா என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை - ஸ்டாலின்
x
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில்  முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், தொண்டர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற  அதிர்ச்சி தாங்காமல் 21 தொண்டர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியால், தாம் மன அழுத்தத்தில் உறைந்து போயிருப்பதாக, அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தமது
ஆழ்ந்த  இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவேரி மருத்துவமனை அறிக்கையில் 
குறிப்பிட்டுள்ளது போல், கருணாநிதி உடல் நிலை சீராகி வருவதாகவும், மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து, கண்காணித்து 
வருவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தொண்டர்கள் யாரும் தங்களின் உயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்