நிதிஷ்குமாரை சந்தித்தார், அமித்ஷா

நிதிஷ்குமாருடன் கூட்டணி தொடரும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவிப்பு
நிதிஷ்குமாரை சந்தித்தார், அமித்ஷா
x
பீஹார் சென்றுள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தலைநகர் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தள தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமாரை சந்தித்தார். இரு கட்சிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படும் சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

பின்னர், பாட்னாவில் நடைபெற்ற  பாஜக ஊழியர் கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, பீஹாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடரும் என அறிவித்தார். பீஹாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, இன்றிரவு நிதிஷ்குமாரை மீண்டும் சந்தித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்