"பயிர் காப்பீடு முழுமையாக விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் துரைக்கண்ணு

பயிர்க் காப்பீடு வழங்கப்படாத மாவட்டங்களுக்கு விரைவில் பயிர்க்காப்பீடு முழுமையாக வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீடு முழுமையாக விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் துரைக்கண்ணு
x
பயிர்க் காப்பீடு வழங்கப்படாத மாவட்டங்களுக்கு விரைவில் பயிர்க்காப்பீடு முழுமையாக வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். 

கேள்வி நேரத்தின் போது பேசிய ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக உறுப்பினர் சக்கரபாணி, நாகப்பட்டினம், திண்டுக்கல் மாவட்டங்களில் பயிர்க்காப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என கூறினார். தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் மார்கெட்டில் குளிர்சாதன கிடங்கு ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, பயிர்காப்பீடு முழுமையாக கிடைக்காத மாவட்டங்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குளிர்சாதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்