18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதி முன் இன்று விசாரணை
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு மூன்றாவது நீதிபதி முன் விசாரணைக்கு வர உள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, 3 வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதற்கான நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தகுதி நீக்கப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி சத்தியநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு, 3-வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மாலை 4 மணிக்கு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
Next Story