வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி - ரயிலை மறித்து, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி - ரயிலை மறித்து, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
x
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்  மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த கட்சியினர், அங்கு புறப்பட தயாராக இருந்த நாகர்கோவில் விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்