தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம் : கட்சிகள், பொதுநல அமைப்பினர் பங்கேற்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னையில் நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம் : கட்சிகள், பொதுநல அமைப்பினர் பங்கேற்பு
x
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம் : கட்சிகள், பொதுநல அமைப்பினர் பங்கேற்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  இந்திய கம்யூனிஸ்ட்  மூத்த தலைவர் நல்லகண்ணு,  மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


தூத்துக்குடியில் இரவு நேர கைதுகள் நடக்கிறது - டி.கே.எஸ்.இளங்கோவன்



தூத்துக்குடியில் இரவு நேர கைதுகள் நடக்கிறது. போராடுவோரை அச்சுறுத்துவது தவறு. சேலம் மக்களின் போராட்டம் அரசுக்கு எச்சரிக்கை.

1994-முதல் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் - நல்லகண்ணு



1994-முதல் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 24 ஆண்டுகளாக வேறு வேறு விதமாக நடக்கிறது, புதிதாக நடக்கவில்லை; இது மக்கள் போராட்டம்.

அரசுக்கு எதிராக போராடுவோரை கைது செய்கின்றனர் - ஜி.ராமகிருஷ்ணன்


8 வழி சாலைக்கு எதிராக போராடுவோரை மிரட்டுகின்றனர். அரசுக்கு எதிராக போராடுவோரை கைது செய்கின்றனர். இது, ஜனநாயகத்துக்கு ஆபத்தான செயல்.

13 பேர் கொல்லப்பட்ட பின், தமிழகம் அமைதியாகிவிட்டது - திருமாவளவன்


ஜல்லிக்கட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி 13 பேர் கொல்லப்பட்ட பின், தமிழகம் அமைதியாகிவிட்டது, இதைத்தான் ஆளும் வர்க்கம் எதிர்பார்க்கிறது



Next Story

மேலும் செய்திகள்