8 வழி சாலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு - கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
8 வழி சாலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு - கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு
x
நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சேலம் மாவட்டம் ஒமலூரில் கடந்த மாதம் விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பேசி இருந்தார். இதையடுத்து மன்சூர்அலிகான் மீது வழக்கு பதிவு செய்து தீவட்டிபட்டி போலீசார், சென்னையில் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் சேலம் அழைத்து செல்லப்பட்ட மன்சூர் அலிகான், விசாரணைக்கு பின்னர், மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  நீதிபதியின் உத்தரவின் பேரில் , நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



Next Story

மேலும் செய்திகள்