சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா

சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உறுதியாகியுள்ளது.
சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா
x
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ மருத்துவர் அர்ச்சனா மற்றும் செவிலியர் ரேணுகா ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது செவிலியர் ரேணுகா  நியூட்ரிசீயன் அறிவுரைப்படியே ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கப்பட்டது என கூறியுள்ளார். ஆனால் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதாம் அல்வா ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டு உள்ளதே என அப்பல்லோ அளித்த உணவு பட்டியலை காட்டி ஆணையம் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு    ரசகுல்லா, லட்டு, குலோப்ஜாமுன் வழங்கிய தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு பாதாம் அல்வா வழங்கப்பட்ட தகவலும் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்