அதிமுக, இரட்டை இலையை மீட்பது தொண்டர்கள் கையில் உள்ளது தினகரன்
தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகம்
திறக்கப்பட்டது. அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அருகே தலைமை அலுவலகத்தை, தினகரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில்
நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக
குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் மற்றும் ரத்னசபாபதி ஆகியோர் பங்கேற்கவில்லை.
Next Story

