7 பேர் உடல் நசுங்கி பலி - 27 பேர் ரத்த காயத்தோடு... உத்தரகாண்ட்டை உலுக்கிய சம்பவம்

x

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 35 பக்தர்கள், பேருந்தில் கங்கோத்ரிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். கங்னானி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். டெல்லி சென்றுள்ள உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, விபத்து குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்