சபரிமலை தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு நிறைவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான ஆன் லைன் முன்பதிவுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. டிசம்பர் 2 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை தினமும் 25,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நாட்களில் ஸ்பாட் புக்கிங் மூலம் தினமும் அதிகபட்சம் 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story