மோசடி மன்னன் மோன்சன் மாவுங்கல் விவகாரம் - ஜாமின் மனுவை நிராகரித்தது கேரள நீதிமன்றம்

கேரளாவில் மோசடி வழக்கில் கைதான மோன்சன் மாவுங்கலின் ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
மோசடி மன்னன் மோன்சன் மாவுங்கல் விவகாரம் - ஜாமின் மனுவை நிராகரித்தது கேரள நீதிமன்றம்
x
பழங்கால பொருட்களை விற்பதாக கூறி மோசடி செய்ததாக மோன்சன் மாவுங்கல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது நில மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே நில மோசடி உள்ளிட்ட 2 வழக்கில் ஜாமின் கோரி அவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்த நிலையில் மோன்சனுக்கு உதவியவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்