சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட விவகாரம்.. உடலை வாங்காமல் 50வது நாளாக போராட்டம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
x
சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட விவகாரம்.. உடலை வாங்காமல் 50வது நாளாக போராட்டம் 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி, கைதிகளுக்கிடையே மோதல் வெடித்தது. இதில் நாங்குநேரியை அடுத்த வாகைகுளத்தைச் சேர்ந்த விசாரணைக் கைதியான முத்துமனோ கொல்லப்பட்டார். இதையடுத்து, முத்துமனோவின் கொலைக்கு காரணமான சிறைத்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதியக்கோரி, அவரது உடலை வாங்காமல் உறவினர்கள் 50வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையின் கண்காணிப்பாளரான கிருஷ்ணகுமார், கார்த்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், பாளையங்கோட்டை சிறைக்காவலர் பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, மதுரை சிறைக்காவலர் வசந்த கண்ணன் பாளையங்கோட்டை மாற்றப்பட்டுள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்