"ஹோமியோ மருந்து வழங்குவதை தடுக்க கூடாது" -கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கொரோனாவை தடுப்பதற்கு ஹோமியோ மருந்து வழங்குவதை அரசு தடுக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,.
ஹோமியோ மருந்து வழங்குவதை தடுக்க கூடாது -கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
"ஹோமியோ மருந்து வழங்குவதை தடுக்க கூடாது" - கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

கேரளாவில் கொரோனாவை தடுப்பதற்கு ஹோமியோ மருந்து வழங்குவதை அரசு தடுக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,. கேரளாவில் மத்திய அரசின் ஆயுஷ் துறையின் வழிகாட்டுதல்படி ஹோமியோ சிகிச்சை அளித்த தன் மீது நடவடிக்கை எடுப்போம் என கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்ததாக கூறி திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஜெயபிரசாத் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம்,கேரளாவில் கொரோனாவை தடுப்பதற்கு ஹோமியோ மருந்து வழங்கலாம் எனவும் மத்திய அரசின் ஆயுஷ் துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு பொறுப்பு உள்ளதாகவும்  கூறியுள்ளது. மேலும், ஆயுஷ் துறை அங்கீகரித்துள்ள  ஹோமியோ மருந்துகளை  மருத்துவர்கள்  வழங்குவதை அரசு தடுக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது
 

Next Story

மேலும் செய்திகள்