"மக்கள் அமைதியாக போராட உரிமை உள்ளது" - டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. கருத்து

மக்கள் அமைதியாக போராட உரிமை உள்ளதாக டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா.கருத்து தெரிவித்துள்ளது.
மக்கள் அமைதியாக போராட உரிமை உள்ளது - டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. கருத்து
x
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப் , ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது. 
மக்கள் அமைதியாக போராட உரிமை உள்ளதாகவும், அவர்களை அமைதியாக போராட அனுமதிக்க வேண்டும் என்றும் ஐநா பொது செயலாளருக்கான செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிடுவது  தேவையற்றது எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா அதிபரை தொடர்ந்து ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்