"திருவிழா காலங்களினால், கொரோனா பாதிப்பு அதிகரிப்பு" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

திருவிழா காலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருவிழா காலங்களினால், கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
x
திருவிழா காலங்களில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், கடந்த ஐந்து வாரங்களாக கொரோனா பாதிப்பின் தினசரி புதிய இறப்புகளில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா  ஆகிய மாநிலங்களில் 58 சதவிகிதம், புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்