நடிகை கங்கனா, அவரது தங்கை மீது தேச துரோக வழக்கு - மும்பை நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் நடவடிக்கை
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது தங்கை ரங்கோலி சான்டல், ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருவரும், சமூக வலைத்தளங்களில், ஜாதிபிரிவு உண்டாகும் படியான கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பாந்திரா நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, மும்பை போலீசார், 124 ஏ பிரிவின் கீழ், தேச துரோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.
Next Story