"எல்லையில் தன்னிச்சையாக எதையும் மாற்ற முயல வேண்டாம்" - சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
எல்லையில் தன்னிச்சையாக எதையும் மாற்ற முயல வேண்டாம் - சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
x
இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லையில், எந்தவித மாற்றத்தையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முயல வேண்டாம் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது. இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், எல்லையில் குவிக்கப்பட்டு உள்ள வீரர்கள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது சிக்கலான நடைமுறை என்பது தெரியும் என்றும், பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படும் வகையில், இருநாடுகளும், வீரர்களை பதற்றமான பகுதியில் இருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்