கிசான் உதவி திட்டத்தில் மோசடி - விசாரணை தீவிரம்

பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் மோசடி நடைபெற்றது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
x
பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் மோசடி நடைபெற்றது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கடலூர் மாவட்டம், விஜய மாநகரத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் கிசான் உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பயனாளிகள் சேர்க்கப்பட்டு நிவாரணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரண தீவிரமடைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்