ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டி கொலை - வெட்டி சாய்த்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

புதுச்சேரி அருகே ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட தொழிலதிபரை அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
புதுச்சேரி  அருகே வில்லியனூர் பகுதியை சேர்ந்த  வார்டு மணி என்கிற ராமச்சந்திரன். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளதோடு ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவர் தமது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் அந்த மர்ம கும்பல் தப்பி ஓடியது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக் காரணம் தொழில் போட்டியா அல்லது முன் விரோதமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்