நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு விவகாரம் - வழக்கை சிபிஐ விசாரிக்க ரசிகர்கள் வலியுறுத்தல்
நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்புக்கு பல காரணங்கள் சொல்லப்படும் நிலையில், அவர் மன அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு மர்மமாக உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவருக்கு மன அழுத்த பிரச்சினை இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர், சுஷாந்த் சிங்கிற்கு மன அழுத்த சிகிச்சை அளித்த மருத்துவரை சந்தித்து உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டில் 'பிபோலர் டிஸாடர்' (bipolar disorder) என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங், தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சர்ச்சைகள் உள்ள நிலையில், இந்த தகவல் புதிய கோணத்தில் விசாரணை செய்ய உதவும் என போலீசார் கூறியுள்ளனர்.
Next Story