கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்

கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது.
கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்
x
கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில கல்வித்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.  சுமார் இரண்டாயிரத்து 400 மையங்களில் எட்டரை  லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக 40 பேர் வரை அமரக்கூடிய தேர்வு அறையில் தற்போது 18 பேர் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு எழுத முடியாத மாணவர்கள், துணைத் தேர்வு எழுதலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்