உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரிகள் - நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 2 பேர், டெல்லி உணவத்தில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
x
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்த அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான் ஆகிய இருவரின் நடவடிக்கையில் சிறப்பு பிரிவு போலீசார் சந்தேகம் கொண்டு ரகசியமாக கண்காணித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் உயர் கமிஷனுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில்,
இந்தியாவில் உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு அரசால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான், தூதரக அதிகாரிகள் டெல்லி உணவத்தில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
======

Next Story

மேலும் செய்திகள்