திடீரென்று பழுதான ஆம்புலன்ஸ் வாகனம் : தமது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்.எல்.ஏ. ரோஜா
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் பழுதானதால், நடுவழியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, நகரி எம்.எல்.ஏவான ரோஜா, தமது சொந்த காரில் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் பழுதானதால், நடுவழியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, நகரி எம்.எல்.ஏவான ரோஜா, தமது சொந்த காரில் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார். சரஸ்வதி என்ற பெண், மகப்பேறுக்காக திருப்பதி மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது ஆம்புலன்ஸ் வாகனம் பழுதானது. அப்போது அந்த வழியாக வந்த, ரோஜா, சரஸ்வதியை பிரசவத்திற்காக திருப்பதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எம்எல்ஏவின் இந்த செயலுக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story