மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
x
மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு  இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த கூட்டத்தில் முரளிதரன் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முரளிதரன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்வதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே பணிகளை கவனிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரை பரிசோதித்து பார்த்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்