நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அறிவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி வரை நாடு முழுக்க உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அறிவிப்பு
x
கொரோனா அச்சம் காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி வரை நாடு முழுக்க உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த , மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்,  பள்ளிகள், கல்லூரிகள், நீச்சல் குளங்கள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். 

மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுவது நல்லது என்றும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். மார்ச் 18 ஆம் தேதி முதல் ஐரோப்பிய யூனியன், துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்