நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு
x
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், 64 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 16 இத்தாலியர்களும், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், கேரளாவில்17 பேரும், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா,  காஷ்மீர்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளா, கர்நாடகா, பீகார் மாநிலங்களில், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , டெல்லியில் உயர்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்