கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு:"தடுப்பு நடவடிக்கை தீவிரம், மக்கள் அச்சப்பட வேண்டாம்" - கேரள முதலமைச்சர் வேண்டுகோள்

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு:தடுப்பு நடவடிக்கை தீவிரம், மக்கள் அச்சப்பட வேண்டாம் - கேரள முதலமைச்சர் வேண்டுகோள்
x
கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டங்களை சேர்ந்த இருவர், அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாடுகளில் இருந்து கேரளா திரும்பியதாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு ள்ளதாகவும் கேரள மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்