அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு
x
மார்ச் 1 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை கர்நாடக சுகாதார துறை உறுதி செய்துள்ளது. பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனையில் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் சந்தித்த நபர்களிடமும் கொரோனா பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு  நர்சரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்