நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா தரப்பில் சீராய்வு மனு - தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிக்கை

நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குப்தா தரப்பில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா தரப்பில் சீராய்வு மனு - தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிக்கை
x
நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குப்தா தரப்பில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும், வரும் 3 ந்தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும் என்ற  டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான மனுவை வரும் 5 ந்தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில் குற்றவாளி பவன்குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்