கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துள்ளது.
x
கேரளாவில் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துள்ளது. மருத்துவர் ஜெகதீஷ் தலைமையிலான இந்த குழு, கேரளாவில் இருந்து வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும் விதமாக, மருத்துவ முகாமை மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்