சீனாவில் இருந்து 323 இந்தியர்களுடன் டெல்லி வந்தது 2வது சிறப்பு விமானம்

கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக உள்ள சீனாவின் உகான் பகுதியில் இருந்து 323 இந்தியர்களுடன், ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது.
சீனாவில் இருந்து 323 இந்தியர்களுடன் டெல்லி வந்தது 2வது சிறப்பு விமானம்
x
முதல்கட்டமாக 324 இந்தியர்கள், உகானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறப்பு மருத்துவ  முகாம்களில், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக உள்ள சீனாவின் உகான் பகுதியில் இருந்து 323 இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது. இந்த விமானத்தில் மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்