"தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி கேரளாவில் நடக்காது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி கேரளாவில் நடைபெறாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி கேரளாவில் நடைபெறாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கேரள பாதுகாப்பு துறையினரின் விபரங்கள் சேகரிக்கப்படுவதற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பிற்கும் தொடர்பில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story